Banner 468 x 60px

 

Wednesday, April 24, 2013

​பெண்களுக்காண விஷேட சொற்பொழிவு மற்றும் மாணவர் ஆளுமை விருத்திக் கருத்தரங்கு

0 comments
பெண்களுக்காண விஷேட சொற்பொழிவு மற்றும் மாணவர் ஆளுமை விருத்திக் கருத்தரங்கும் கடந்த 2013.04.07 ம் திகதி ஞாயிறு வெல்பொதுவெவ அல் இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதனை SEEDS நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்தியது. இந்நிகழ்வு மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக பெண்களுக்கான விஷேட சொற்பொழிவு இல்லற வாழ்வில் மனைவியின் கடமைகளும் குழந்தை வளர்பில் பெற்றோரின் பங்கும் என்ற தலைப்பில் ஹாதிய்யா கலாபீட விருவுரையாளர் சகோதரி அஸ்மியா வினால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது கட்டமாக உயர்கல்வியை தொடந்து கொண்டிருப்பவர்களுக்கான ஆளுமைவிருத்திக் கருத்தரங்கு Dr. MTM அலவி அவர்களினால் இஸ்லாமும் கல்வியும் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் வெல்பொதுவெவ பிரதேசத்தில் உயர்கல்வியை தொடர்கின்ற மாணவர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
மூன்றாவது கட்டம் பாடசாலை மாணவர்களுக்கு நடைபெற்றது. இதில் இருவர் விரிவுரையாற்றினர். முதலாவது உரை Dr. MTM அலவி அவர்களினால் மாணவர் சமூகமும் நெறிபிறழ்வுகளும் எனும் தலைப்பிலும் அடுத்து Dr.  ஹுஸ்னி ஜாபிர்  அவர்களினால் " நாம் எவ்வாறு எம்மை சாதனையாளர்களாக மாற்றுவது " எனும் தலைப்பிலும் விரிவுரைகள் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு ஊரிலுள்ள பெரும்மனம் படைத்த உள்ளங்கள் உதவிகளை செய்தனர் அத்தகையோர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
 Dr. MTM அலவி அவர்களின் விரிவுரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்




  Dr.  ஹுஸ்னி ஜாபிர் அவர்களின் விரிவுரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்




 சகோதரி அஸ்மியா  அவர்களின் விரிவுரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்


 
Dr. MTM அலவி அவர்களின் விரிவுரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்





0 comments:

Post a Comment