Banner 468 x 60px

 

Tuesday, July 16, 2013

இஸ்லாமியப் பார்வையில் பெண்.

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ....

பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்துகிறது என ஊடகங்களிலும்,
தினசரிகளிலும் அறியாதோர் ஆயிரம் கட்டுக்கதைகளும் எழுதினாலும்....
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அது ஒரு துளி அளவு கூட பாதிப்பை
ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனம்.....!!!!

முஸ்லிம்கள் பெண்களை மூடி வைத்து
கொள்கின்றனர் என விதண்டாவாதம் பேசுவோர்.....
மனிதனுக்கு அழகிய வழியை மட்டும் காட்டும் இஸ்லாம்
என்னும் அழகிய மார்க்கத்தில்,
ஒரு மனிதன் தன் தாய்க்கு பணி விடை செய்வதன் நல்ல முறையில்
நடந்து கொள்வதின் மூலமாக சொர்க்கம் செல்கிறான் என்ற நபிகளாரின் பொன் மொழியை படித்துப்பார்த்ததுண்டா...???

ஒரு பெண் குழந்தை பிறப்பில் இருந்து மரணிக்கும்வரை தன் வாழ்வில் அவளை நன்முறையில் நடத்தவேண்டும் எனவும் ....
அவர்களுடன் சரியான முறையில் நடந்துகொள்ளவில்லையென்றால்
அநீதம் இழைத்தால் அவன் அதை பற்றி கடுமையாக விசாரிக்கப்படுவான் என்று அச்சமூட்டி எச்சரித்த மார்க்கம் இஸ்லாம் தவிர வேறு ஏதும் உண்டா...???

ஒரு முஸ்லிம் ஆண்...தன் குடும்பத்தில் உள்ள பெண்களான
தாய்,சகோதரி,மகள்கள்,மனைவியிடம் நல்ல முறையில் நடந்து
கொள்வது அவனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் காரியம் என
போதித்த மார்க்கம் இஸ்லாத்தை தவிர வேறு ஏதும் உண்டா....???

தாயைப்பற்றி அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்...

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”
அல் குர் ஆன் -31:13.

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்.
அல் குர் ஆன் -46:15.

இப்படிப்பட்ட தாயின் காலடியிலே சொர்க்கம் இருக்கிறது .
நசயீ- 3104,அஹ்மத்15475.
என அண்ணலார் கூறியுள்ளார்கள்.

எவருக்கு பெற்றோர்களில் இருவரோ அல்லது அவர்களில் ஒருவரோ  இருந்து,அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவில்லையென்றால் அவர் நரகத்தில் நுழைவார்.மேலும்,அல்லாஹ் அவனைத் தனது அருளை விட்டு தூரமாக்கிவிடுவான்.தப்ரானீ-346....

இன்னொரு ஹதீஸில் பெற்றோரை பேணாதவனின்
மூக்கு மண்ணை கவ்வட்டும் என அண்ணலார் எச்சரித்துள்ளார்கள்.

நம்முடைய வாழ்நாளில் நாம் எத்தனையோ
உறவையும்,நட்புகளையும் கடந்து வந்தாலும் நம் தாய்....தாய்....
தாயை தவிர வேறு யாரும் நம்மை 10 மாதம் சுமக்கவில்லை .....!!!

20 வயது வரை இடி விழுந்தாலும் தூக்கத்தில் எழாத அப்பெண் திருமணமாகி குழந்தை பெற்ற பின்பு மழலையின் அழுகுரல் க்ரீச் என கேட்டதும் தூக்கிவாறிப்போட்டு எழுவாள் தெரியுமா.....அதுவே தாய்ப்பாசம்...

தன் தூக்கத்தை தியாகம் செய்து குழந்தையை தாலாட்டுவாள்....
தன்னை அலங்கரிக்க மறந்து குழந்தையை அலங்கரித்து
கண் குளிர்ச்சி அடைவாள்.......
பசி வரும் நேரம் குழந்தை அழுதால் தன் பசி மறந்து
குழந்தைக்கு அமுதூட்டுவாள்.....
தன் குழந்தையின் அசுத்தததை  முகம் சுளிக்காமல்
இரவும்,பகலும்  சுத்தம் செய்வாள்....

நமக்காக,....நமக்கே.....நமக்காக இத்தனை பணிவிடையும் செய்யும் சுயநலமில்லாத ஒரு நபர் இவ்வுலகத்தில் உண்டா........???

அல்லாஹ்வின் அன்பு 70 தாய்களின் அன்புக்கு சமமானது
என தாயின் அன்பையே உதாரணமாக கூறுகிறான் என்றால்....
சுபுஹானல்லாஹ்....சொல்ல வார்த்தைகளே இல்லை......

இத்தனை தியாகமும் நம் வாழ்நாளில் செய்யக்கூடிய ஒரே
மனுஷி தாய் மட்டுமே!!!

இந்த தாயிடமும்,தந்தையிடமும் எப்படி நடக்க 
வேண்டுமென அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்....!!!
இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை 
அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக;அல் குர் ஆன் -17:24.

ஆனால்,நாமோ.....ஆசிரியரிடம் கை கட்டி பணிவாக நிற்கிறோம்...
பெற்றோரிடம் அவ்வாறு பணிவோடு நடப்பதில்லை.....

ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்;-

நான் கேட்டேன்:இறைவனின் தூதரே!!!பெண் மீது யாருக்கு
                                  அதிகமான உரிமை இருக்கின்றது?”

அண்ணல் நபிகளார் கூறினார்கள்: அவளுடைய கணவனுக்கு’.

நான் கேட்டேன்: ஆண் மீது யாருக்கு அதிகமான உரிமை இருக்கின்றது?’’

அண்ணல் நபிகளார் விடையளித்தார்கள்;அவனுடைய தாய்க்கு’’
ஹாகிம்-7244
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து,
இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள்.
புகாரி-5971.
அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். புகாரி-5975.

இதெல்லாம் தாயைப் பற்றி இஸ்லாம் கூறியுள்ள உயர்வான கருத்துக்கள்.

இன்னும் தாய்க்கு அடுத்து  ஒரு ஆண் தன் வாழ்க்கையில்
சந்திக்கும்  மிகவும் அதி முக்கியமான நபர்....மனைவி....

மனைவியின் அருமையை பற்றி குர் ஆன் கூறும் செய்தியை பார்ப்போமா???

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்;
உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
அல் குர்ஆன்- 30:21.

மனைவியை பற்றி அல்லாஹ் மன அமைதி என்றும்
சிந்தித்து உணரக்கூடிய அத்தாட்சி எனக்கூறுகிறான்....

திருமணத்திற்கு முன் வரை விளையாட்டு பிள்ளையாய் இருக்கும்
பெண் திருமணம் செய்த பின் தன் சொந்த பந்தங்களை எல்லாம்
விட்டு விட்டு கணவனின் மீது உள்ள பாசத்தால் கசிந்துருகி
கணவனை மிக உயர்வான இடத்தில் இருத்தி அவனுக்காகவே தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறாள்....

அப்படிப்பட்ட பெண் ஏதேனும் சில விசயங்களில் கருத்து வேறுபாட்டுடன் நடந்தால் அம்மனைவியிடம் எப்படி நடக்க வேண்டும் என அல்லாஹ் கணவனுக்கு இடும் கட்டளையை பாருங்கள்....

அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
அல்குர் ஆன் -4:19.

இன்னும்,இவ்வுலகத்தில் மனிதனுக்கு கிடைக்கும் மிக
சிறந்த பொக்கிஷமென அண்ணலார் கூறுவது நல்ல மனைவியை......

இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களில்
மிகவும் மேலானது நல்ல மனைவியே......
முஸ்லிம்-2911.

இரண்டு மனைவிகள் உடைய கணவனுக்கு
வல்லோன் இடும் கட்டளையை பாருங்களேன்....
பெண் மீது ஆண் கொடுமை இழைக்காதிருக்க இறைவன் அநியாயத்தின் அத்தனை வாசல்களையும் தன் வசனத்தின் மூலம் அடைத்து விட்டான்....

முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
அல் குர் ஆன் -4:129
இதைப்பற்றி அண்ணலார் கணவனுக்கு இடும்
எச்சரிக்கையை பாருங்களேன்....

யாருக்கேனும் இரண்டு மனைவியர் இருந்து,
அந்த இருவருக்கும் இடையே நேர்மையாக நடக்கவில்லையானால்,
ஒரு பக்கம் சாய்ந்தவனாக மறுமையில் வருவான்.
அபூதாவூத்,நஸயீ,இப்னுமாஜா.

இன்னும் மனிதர்களில் சிறந்தவர் யார் என அடையாளம்
காண அண்ணலார் சொல்லும்  அளவுகோல் என்ன தெரியுமா???
மனைவியடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமாம்....!!!..ஆம்..!!

உங்களில் எவர் தம் மனைவியிடம் நல்லவராக 
இருக்கின்றாரோ அவர்தாம் உங்களில் நல்லவர்.
திர்மிதீ-1195.

ஒரு ஆண் தன் நண்பர்களிடத்திலோ,வேலை பார்க்கும் இடத்திலோ நல்ல மனிதனாக காட்டிக்கொள்ள முடியும்....ஆனால்,மனைவி மட்டுமே அவனை சரியாக அளக்கும் அளவுகோல் என அண்ணலார் அருள்மொழி பகிர்ந்துள்ளார்கள்...

இன்னும் அவனுக்கு பிறக்கும் பெண் குழந்தையை
நற்செய்தி என்று சிறப்பித்து சொல்வதும்....
நேர்வழி காட்டும் இஸ்லாமே..................

இரண்டு பெண்மக்களை பெற்றவருக்கும்,மூன்று பெண்மக்களை பெற்றவருக்கும் அண்ணலார் கூறும் நற்செய்தி இதோ.................

 “எவர் இரு பெண் மக்களை வளர்த்து பரிபாலித்து வந்தாரோ,அவரும் நானும் இணைந்து  இந்த  இரு விரல்களைப் போல் சொர்க்கத்தில் நுழைவோம்”என்று நபி ஸல் அவர்கள் தமது இரு விரல்களை சுட்டிக்காட்டினார்கள்.
#திர்மிதி-191.

“எவருக்கு 3 பெண் மக்கள் அல்லது 3 சகோதரிகள் அல்லது 2 பெண் மக்கள் அல்லது 2 சகோதரிகள் இருந்து அவர்களை நன்முறையில் பராமரித்து அவர்களுக்குரிய கடமைகளில் அல்லாஹ்வை பயந்து நடந்தால்,அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்.
#திர்மிதீ-1916.

ஆண் பிள்ளைகளுடன் பெண் பிள்ளைகளை பாரபட்சம் காட்டும் ஆணுக்கு இஸ்லாம் கூறும் எச்சரிக்கை என்ன தெரியுமா....???

“எவருக்கு பெண்  குழந்தை பிறந்து அவர் அதை (அறியாமைக்காலத்தில்  செய்தது போல்)  உயிருடன் புதைக்காமல்,அதை இழிவாக கருதாமல்(அவர்களுடன்  பழகுவதில்) பெண் பிள்ளையை விட  ஆண் பிள்ளைக்கு முன்னுரிமை தராமல்,(மகனுடன் நடந்து கொள்வது போலவே மகளுடனும்) நடந்தார் என்றால்,மகளுடன் நடந்து கொண்ட முறைக்கு  பிரதிபலனாக  அல்லாஹுத்த ஆலா  அவரை சுவர்க்கத்தில் நுழைய வைப்பான்”
#ஹாகிம்-177.

எவரேனும் ஒரு முஸ்லிமுக்கு இரு பெண் மக்கள் இருந்து இவர் அவர்களுடன் நல்லமுறையில் நடந்து அவ்விருவரும் இவரிடத்தில் இருக்கும் வரை,அல்லது இவர் அவர்களிடத்தில் இருக்கும் வரை அவ்விரு பெண் மக்களும் இவரை நிச்சயம் சொர்க்கத்தில் நுழைய வைப்பார்கள்.
#இப்னு ஹிப்பான்- 207.

பெண் குழந்தையுடன் நல்ல முறையில் நடக்கும் ஆணுக்கு சொர்க்கம் என நற்செய்தி சொல்வது அழகிய மார்க்கமான இஸ்லாம் மட்டுமே ஆகும்...

இன்னும் ஒரு சகோதரியை பொறுப்பேற்றுக்கொள்ளவே யோசிக்கும் சுயநலமிக்க உலகத்தில் இரண்டு அல்லது மூன்று சகோதரிகளுக்கு உணவளித்து  பொறுப்பேற்று கொள்ளும் ஆணுக்கு சொர்க்கம்
என நற்செய்தி சொல்வதும் இஸ்லாம் மட்டுமே.............

இன்னும் தன் குடும்பத்திற்கு மட்டும் உழைக்கும் சுயநல ஆண்களுக்கு மத்தியில் விதவைப்பெண்ணுக்கும்,ஏழைக்கும் உதவி செய்யும் ஆணுக்கு
ஜிஹாதின் நன்மை கிடைக்கும் என ஆர்வமூட்டுவதும் இஸ்லாம் மட்டுமே...!!!

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர் 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார்.
புகாரி-6006

பெண் தாயாகவும்,மனைவியாகவும்,மகளாகவும் இருக்கும்போது அவளுக்கு கிடைக்க கூடிய உரிமைகள்,சலுகைகள் வேறு எந்த மதத்திலோ,இனத்திலோ
இல்லை....

இன்னும் அண்ணல் நபி ஸல் அவர்கள் தனது இறுதிப்பேருரையில் மிக மிக வலியுறுத்தி சொன்ன வாசகம் இவை.........

“பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள்”.
                                             
ஆம்............ஆணுக்கு இறைவன் கொடுத்த  மிகச்சிறந்த சொத்து பெண்......
வாழ்க்கைத்துணை  ........கண் குளிர்ச்சியாம்.........
மகள் நற்செய்தி.........
சுபுஹானல்லாஹ்...........
பெண்ணை இதற்கு மேல் உயர்த்தும் சித்தாந்தம்
எங்கும் எங்கும் எங்குமே................ இல்லை....

ஆண் தன் தாய்க்கு சிறந்த மகனாக நடந்து
கொள்ளும்போது அவன் சொர்க்கம் செல்கிறான்.......

தான் பெற்ற மகளுடன் சிறந்த தகப்பனாக நடந்துகொள்ளும்போது
அவன் செயல் சொர்க்கம் செல்லும் சாதனமாக உதவுகிறது.....

இன்னும்,முஸ்லிமின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும்
பள்ளிவாசல்களில் உள்ள மிம்பர் பற்றிய ஆலோசனை சொன்னது
ஒரு பெண் என தெரியுமா........???

இன்று உலகெங்கும் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள மிம்பர்
ஒரு பெண்ணின் ஆலோசனையால் நபிகளாரால் அங்கீகரிக்கபட்டது
எனும் செய்தியை பாருங்கள்.......!!!

அந்த மிம்பர் படிகளின் மீது நின்றுதான் ஜும் ஆ உரை நிகழ்த்தப்படுகிறது...

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின்போது (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு மரம்... அல்லது பேரீச்ச மரத்தின்.... (அடிப்பாகத்தின்) மீது சாய்ந்த படி (உரையாற்றிய வண்ணம்) நின்றிருந்தார்கள். அப்போது ஓர் அன்சாரிப் பெண்மணி...., 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உங்களுக்கு ஓர் உரை மேடை (மிம்பர்) செய்து தரலாமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)" என்று பதிலளித்தார்கள். அவ்வாறே அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு (மிம்பர்) உரை மேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள். ஜும்ஆ நாள் வந்தபோது நபி(ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்திட) உரைமேடைக்குச் சென்றார்கள்.
புகாரி-3584.

பெண்ணை அடிமைப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம் என சொல்லும்
மூடர்கள் பெண்ணை ஆண் சொர்க்கம் செல்லும் சாதனமாக ஆக்கி
பெண்ணை சிறப்பித்த இஸ்லாமிய மார்க்கத்தை அகக்கண் கொண்டு
படித்து நேர்வழி பெற வல்லோனை பிரார்த்திக்கிறேன்.
Read more...

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

0 comments
உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.
மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு?
இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா.
மாரடைப்பு என்றால் என்ன?
ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.
சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.
இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.
மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?
காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை.
கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய்.
கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை.
இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்?
மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.
சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு “அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.
இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்: பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.
சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு “ஆஞ்சைனா’ என்று பெயர்.
நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி. மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.
Read more...