Banner 468 x 60px

 

Wednesday, October 2, 2013

AH1NI வைரஸ் தொற்று: சிறுவர்களே! கர்ப்பிணி தாய்மாரே கவனம்!

0 comments
சுகாதாரக் கல்விப் பணியகம் 
from puttalamonline.com

இனபுளுயென்சா நோய் சுவாசத் தொகுதியூடன் தொடர்பான ஒரு நோயாகும். அது மனிதரிலிருந்து மனிதருக்கு தொற்றக் கூடியது. நோயாளியொருவர் இருமும் போதோ அல்லது தும்மும் போதோ வெளியாகும் சளி சுகதேகியான ஒருவரை அடையூம் பொழுது நோய் தொற்றிக் கொள்ளலாம். அது புதிய வகை வைரஸ் ஒன்றினால் பரவூவதனால் சமூகத்தினரிடையே நோயெதிர்ப்பு சக்தி குறைவாதலால் இந்த நோய் விரைவாகப் பரவக் கூடியதாயிருக்கிறது.
நோய்க்காரணி
இன்புளுயென்சா வைரஸ் – A H1N1 வகை
நோய்க்காரணி உடலினுள் செயற்படும் விதம்
இன்புளுயென்சா வைரஸ் உடலினுள் நுழைவது சுவாசத் தொகுதியினூடாகவே. அதாவது வாய், மூக்கு வழியாக உட்புகும் வைரஸ் பல்கிப் பெருகி விருத்தியடைந்து சுவாசத் தொகுதியினைப் பாதிப்படையச் செய்கிறது.
நோய் அறிகுறி
காய்ச்சல், தலையிடி, உடல்வலி, தொண்டைவலி, நாசியிலிருந்து நீர் வடிதல், தும்மல், இருமல் சில வேளைகளில் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு.
மோசமான விளைவுகள்
சிறிய அளவினருக்கு நியூமோனியா ஏற்படலாம். நோய் அறிகுறிகள் நாட்செல்லச் செல்ல அதிகரிக்குமானால் அல்லது சுவாசிப்பதில் சிரமம், உணர்வூ மாற்றம், கடும் காய்ச்சல், வலிப்பு போன்றவை இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும். சில வேளைகளில் மரணமும் சம்பவிக்கலாம்.
இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய குழுக்கள்
வயது 2 ஐ விடக் குறைந்தவர்கள் மற்றும் 65 ஐ விடக் கூடியவர்கள், கர்ப்பிணிகள், சிறுநீரக நோயாளிகள், புற்று நோயாளிகள், நீண்ட காலம் ப்ரிட்னிசொலோன் போன்ற மாத்திரைகளைப் பாவிப்போர், நீரிழிவூ நோயாளர்.
சிகிச்சை
வைரஸிற்கு எதிரான மருந்துகள். உதா:- ஒசல்டாமிவிர் போன்றவை கடுமையாக நோய் வாய்ப்பட்டோருக்கும் நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய குழுவினருக்கும் பாவிக்கப்படுகின்றன.
நோயைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் சுகாதார மேம்பாடும்
  • சனங்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்கவூம்
  • அடிக்கடி கைகளைச் சவர்க்காரமிட்டு தூய நீரினால் கழுவிக் கொள்ளவூம்.
  • அடிக்கடி கைகளினால் வாய் மற்றும் மூக்கினைத் தொடுவதனைத் தவிர்க்கவூம்
உங்களுக்கு தற்போது நோய் அறிகுறிகள் இருந்தால்
  • இருமும் போதும் தும்மும் போதும் மூக்கையூம் வாயையூம் கைக்குட்டை அல்லது வீசக்கூடிய டிசு கடதாசி கொண்டு மூடிக் கொள்ளவூம்.
  • பயன்படுத்திய டிசு கடதாசியைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தவூம்இ கைக்குட்டையை அடிக்கடி கழுவிக் கொள்ளவூம்.
  • போஷாக்கான உணவூகளை உண்ணவூம், நீராகாரங்களை அதிகம் உட்கொள்ளவூம்
  • நன்கு ஓய்வெடுக்கவூம்
Influensa_English Preparing_for_pandemic_flu WHO_InfluenzaPoster_Eng
Read more...

குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்!

0 comments


சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.
Read more...

நீங்கள் சிறுநீரக பிரச்சனை உள்ளவரா?இதோ எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு...

0 comments


  சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்

காரட், பாகற்காய், இளநீர்: இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், எலுமிச்சை: இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

அன்னாச்சி பழம்: இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்: கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு: உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
Read more...

Tuesday, October 1, 2013

Grade 5 Scholarship Results - Welpothuwewa MMV

0 comments
 immurai 5m thara pulamaipparisil pareetchayil welpothuwewa AL- Ilmiya muslim maha vidyilayathil 4 maanavarhal sithi adainthullanar. 
Aneeka173,
Ammar169,
Husny165,
Ishra159
oru maanawaruku 2 pullihal kurai ulladhu Arsath - 154 marks cut out marks 156
Ivarhalukku Emadhu SEEDS saarpaaha emadhu vaalthukkalai therivithukkolhirom.
Congratulation for our kids, And we kindly thanks to our principal MSS Musthafa and Our school and  teachers and parents.

Read more...