சுகாதாரக் கல்விப் பணியகம்
from puttalamonline.com
இனபுளுயென்சா நோய் சுவாசத் தொகுதியூடன் தொடர்பான ஒரு நோயாகும். அது மனிதரிலிருந்து மனிதருக்கு தொற்றக் கூடியது. நோயாளியொருவர் இருமும் போதோ அல்லது தும்மும் போதோ வெளியாகும் சளி சுகதேகியான ஒருவரை அடையூம் பொழுது நோய் தொற்றிக் கொள்ளலாம். அது புதிய வகை வைரஸ் ஒன்றினால் பரவூவதனால் சமூகத்தினரிடையே நோயெதிர்ப்பு சக்தி குறைவாதலால் இந்த நோய் விரைவாகப் பரவக் கூடியதாயிருக்கிறது.
நோய்க்காரணி
இன்புளுயென்சா வைரஸ் – A H1N1 வகை
இன்புளுயென்சா வைரஸ் – A H1N1 வகை
நோய்க்காரணி உடலினுள் செயற்படும் விதம்
இன்புளுயென்சா வைரஸ் உடலினுள் நுழைவது சுவாசத் தொகுதியினூடாகவே. அதாவது வாய், மூக்கு வழியாக உட்புகும் வைரஸ் பல்கிப் பெருகி விருத்தியடைந்து சுவாசத் தொகுதியினைப் பாதிப்படையச் செய்கிறது.
இன்புளுயென்சா வைரஸ் உடலினுள் நுழைவது சுவாசத் தொகுதியினூடாகவே. அதாவது வாய், மூக்கு வழியாக உட்புகும் வைரஸ் பல்கிப் பெருகி விருத்தியடைந்து சுவாசத் தொகுதியினைப் பாதிப்படையச் செய்கிறது.
நோய் அறிகுறி
காய்ச்சல், தலையிடி, உடல்வலி, தொண்டைவலி, நாசியிலிருந்து நீர் வடிதல், தும்மல், இருமல் சில வேளைகளில் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு.
காய்ச்சல், தலையிடி, உடல்வலி, தொண்டைவலி, நாசியிலிருந்து நீர் வடிதல், தும்மல், இருமல் சில வேளைகளில் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு.
மோசமான விளைவுகள்
சிறிய அளவினருக்கு நியூமோனியா ஏற்படலாம்.
நோய் அறிகுறிகள் நாட்செல்லச் செல்ல அதிகரிக்குமானால் அல்லது சுவாசிப்பதில்
சிரமம், உணர்வூ மாற்றம், கடும் காய்ச்சல், வலிப்பு போன்றவை இருப்பின்
உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும். சில வேளைகளில் மரணமும்
சம்பவிக்கலாம்.
இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய குழுக்கள்
வயது 2 ஐ விடக் குறைந்தவர்கள் மற்றும் 65 ஐ விடக் கூடியவர்கள், கர்ப்பிணிகள், சிறுநீரக நோயாளிகள், புற்று நோயாளிகள், நீண்ட காலம் ப்ரிட்னிசொலோன் போன்ற மாத்திரைகளைப் பாவிப்போர், நீரிழிவூ நோயாளர்.
வயது 2 ஐ விடக் குறைந்தவர்கள் மற்றும் 65 ஐ விடக் கூடியவர்கள், கர்ப்பிணிகள், சிறுநீரக நோயாளிகள், புற்று நோயாளிகள், நீண்ட காலம் ப்ரிட்னிசொலோன் போன்ற மாத்திரைகளைப் பாவிப்போர், நீரிழிவூ நோயாளர்.
சிகிச்சை
வைரஸிற்கு எதிரான மருந்துகள். உதா:- ஒசல்டாமிவிர் போன்றவை கடுமையாக நோய் வாய்ப்பட்டோருக்கும் நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய குழுவினருக்கும் பாவிக்கப்படுகின்றன.
வைரஸிற்கு எதிரான மருந்துகள். உதா:- ஒசல்டாமிவிர் போன்றவை கடுமையாக நோய் வாய்ப்பட்டோருக்கும் நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய குழுவினருக்கும் பாவிக்கப்படுகின்றன.
நோயைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் சுகாதார மேம்பாடும்
- சனங்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்கவூம்
- அடிக்கடி கைகளைச் சவர்க்காரமிட்டு தூய நீரினால் கழுவிக் கொள்ளவூம்.
- அடிக்கடி கைகளினால் வாய் மற்றும் மூக்கினைத் தொடுவதனைத் தவிர்க்கவூம்
உங்களுக்கு தற்போது நோய் அறிகுறிகள் இருந்தால்
- இருமும் போதும் தும்மும் போதும் மூக்கையூம் வாயையூம் கைக்குட்டை அல்லது வீசக்கூடிய டிசு கடதாசி கொண்டு மூடிக் கொள்ளவூம்.
- பயன்படுத்திய டிசு கடதாசியைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தவூம்இ கைக்குட்டையை அடிக்கடி கழுவிக் கொள்ளவூம்.
- போஷாக்கான உணவூகளை உண்ணவூம், நீராகாரங்களை அதிகம் உட்கொள்ளவூம்
- நன்கு ஓய்வெடுக்கவூம்
0 comments:
Post a Comment