Banner 468 x 60px

 

Thursday, June 13, 2013

பெண்களுக்கான விஷேட கருத்தரங்கும், ஆசிரியர்களுக்கான விஷேட கருத்தரங்கும்

0 comments
SEEDS நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட"குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்க" எனும் தலைப்பிலமைந்த பெண்களுக்கான விஷேட கருத்தரங்கு கடந்த 2013.06.07 ம் திகதி பிற்பகல் 4மணி தொடக்கம் 5.30 மணி வரை வெல்பொதுவெவ அல் இல்மியா மு.மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திஹாரிய பாதிஹ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம் அக்ரம் (நளிமி) கலந்து கொண்டு சிறப்பு விரிவுரையாற்றினார். இந்நிகழ்வுக்கு ஊரின் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.
அத்தோடு அன்றைய தினம் இறை விசுவாசமும் சமூக ஒற்றுமையும் எனும் தலைப்பிலமமைந்த குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம் அக்ரம் (நளிமி) அவர்கள் நடத்தினார்.
அதன் மறுநாள் சனிக்கிழமை ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி கருத்தரஙகு வாமி நிறுவனத்தின் அனுசரனையில்  SEEDS நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு விரிவுரையாளர்களாக அஷ்ஷெய்க் எ.பீ. எம் அப்பாஸ்  (நளிமி) அவர்களும் அஷ்ஷெய்க் றவுப்ஸெய்ன்   (நளிமி) அவர்களும் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்ததினர். இக்கருத்தரங்கிற்கு வெல்பொதுவெவ, கிணியம, பூவல்ல, மதவாக்குளம் போன்ற கிராமங்களில் இருந்து 50 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டணர்.




Kuthba Audios can download from this link
 Ladies Bayan Audio
https://hsmihthisham.opendrive.com/files?NF8xNDM1MDgxNF83Mkh4Rg
 

0 comments:

Post a Comment