Banner 468 x 60px

 

Tuesday, November 27, 2012

0 comments

இத்தாலி ஆடம்பர கப்பலில் இருந்த 29 பயணிகள் மாயம்

ஜிக்லியே தீவுக்கு அருகே பாறையில் மோதி கடலில் மூழ்கிய இத்தாலியின் ஆடம்பரக் கப்பலில் பயணித்த 29 பயணிகள் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும்பணியில் மீட்பாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்துக் காரணமாக இந்த ஆடம்பர கப்பலின் அரைப் பகுதி கடலில் மூழ்கியது. 4200 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற இக்கப்பலில் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் 16 பேர் காணாமல் போனதாக இத்தாலி நிர்வாக முன்னதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது 29 பேர் காணாமல் போயுள்ளதாக அது கூறியுள்ளது.
இவர்களில் கப்பல் ஊழியர்கள் 4 பேரும் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி பயணிகளும் அடங்குகின்றனர். இதனிடையே விபத்து தொடர்பில் அவசர நிலையை இத்தாலி அரசு பிர கடனம் செய்துள்ளது. இதில் கப்பலில் இருக் கும் எண்ணெய் கசி வதை தடுக்க இத்தாலி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கப்பலை தவறாக செலுத்தியது மற்றும் பொடுபோக் காக செயற்பட்ட குற் றச்சாட்டில் கப்பலின் தலைமை மாலுமியை இத்தாலி பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment