Banner 468 x 60px

 

Friday, December 28, 2012

வெள்ளத்தால் மூன்று கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை

0 comments


Thursday, December 28, 2012 - 05:15
வெள்ள அனர்த்தம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மூன்று கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது
மல்வத்து ஓயா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள வாவிகள் பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக சில கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்குவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
பறப்பன் கடந்தான், அடம்பன் தாழ்வு மற்றும் பாளையடி கிராமங்களிலே இந்த வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment