Friday, December 28, 2012 - 11:36

அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தை ஊடறுத்து வீசிய பனிப்புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது.
நியூ இங்கிலண்ட் மாநிலங்களில் அதிகளவு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன், இந்த பகுதிகளில் 30 சென்றிமீற்றர் வரை பனிப்படலம் ஏற்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவின் மத்திய பகுதியிலுள்ள வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பல இலட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment