Friday, December 28, 2012 - 14:53
பொலனறுவையில் பெய்துவரும் கடும் மழையை அடுத்து பராக்கிரம சமுத்திரம், மின்னேரியா மற்றும் கவுடல்ல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கவுடுல்ல கிரிமெட்டிய பிரதேசத்தில் 90 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பொலனறுவை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி கூறியுள்ளார்.
இதேவேளை, சீரற்ற வானிலையால் 340,000ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காணாமற்போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment