
பிரித்தானிய பக்கிங்கம் பல்கலைகழத்தில், பரிசோதனை மேற்கொள்வதற்காக இலங்கையில் இருந்து எடுத்து சென்ற சிவப்பு மழையின் மாதரிகளில் உயிரியல் துகல்கள் காணப்படுகின்றமை மீண்டும் உறுதியாகியுள்ளன.
சிவப்பு மழை தொடர்பான தகவல்கள் கடந்த நொவம்பர் மாதம் 14 ஆம் திகதி பதிவானது.
செவனகல பிரதேசத்தில் பெய்த சிவப்பு மழையின் மாதிரியே இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது
.
இதனிடையே, சிவப்பு மழை தொடர்பான மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, செவனல மாத்திரமின்றி தனமல்வில, மனம்பிட்டிய, ஹிங்குரக்கொட, புத்தளம் ஆகிய பிரதேசங்களிலும் சிவப்பு மழை பெய்திருந்தது.
இதனிடையே, இன்றைய தினம் இரண்டு இடங்களில் மஞ்சள் மழை பெய்துள்ளது.
பொலன்னறுவ - வெலிகந்த, கடவத்மடுவ ஆகிய பிரதேசங்களில் இந்த மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடதக்கது
.
0 comments:
Post a Comment