Banner 468 x 60px

 

Saturday, December 29, 2012

நஷ்டத்தை தடுக்க விலை அதிகரிப்பு

0 comments


2012 டிசம்பர் மாதம 28 வெள்ளிக் கிழமை- பி.ப 07:56
மின்சாரதுறைக்காக வழங்கப்படும் கழிவு எண்ணெய் லீட்டர் ஒன்றின் விலையை 25 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கனியவளத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


மின்சார உற்பத்திகளுக்காக நிவாரண விலையில் எரிபொருட்கள் விநியோகிக்கப்படுவதன் காரணமாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய அளவில் நஷ்டம் ஏற்படுகின்றது.

இதனை தடுக்கும் நோக்கிலே, இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நிவாரண விலையில் எரிபொருட்கள் விநியோகிக்கப்படுவதன் காரணமாக மாதம் ஒன்றிற்கு நாநூற்று பத்து கோடியே 40 லட்சம் ரூபாவிற்கும் மேல் நஷ்டம் ஏற்படுவதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

0 comments:

Post a Comment