Banner 468 x 60px

 

Sunday, December 30, 2012

வன்புணர்வில் உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலி

0 comments

2012 டிசம்பர் மாதம 30 ஞாயிற்றுக் கிழமை- மு.ப 07:13

டில்கியில் பேருந்து ஒன்றில் வைத்து குழு ஒன்றினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சல் செலுத்தியுள்ளனர். 

ஆயிரக்கணக்கான மாணவர்களும், பொது மக்களும் நேற்றைய தினம் டில்கியில் மெழுவர்த்தியை ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடந்த 16ம் திகதி பேருந்து ஒன்றினுள் வைத்து 6 பேரினால் குறித்த மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சைகளுக்காக சிங்கபூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை அவர் உயரிழந்தார்.

அவரது பூதவுடல் நேற்றைய தினம் டில்கிக்கு கொண்டு வரப்பட்டது.

இதன் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர்  வானூர்தி நிலையகத்துக்கு சென்றிருந்தனர்.

இந்தசம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

0 comments:

Post a Comment