Banner 468 x 60px

 

Monday, January 7, 2013

அவுஸ்திரேலியாவின் டஸ்மானியாவில் காட்டுத் தீ: 100 பேரைக் காணவில்லை!

0 comments
அவுஸ்திரேலியாவின், டஸ்மானியா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அடுத்து அங்கு சுமார் 100 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான வெயில் காரணமாக அங்கு வெப்பநிலை 41 பாகை சென்டிகிரேட்டுக்கும் அதிகமாகவுள்ளது. இதனால் இங்குள்ள காட்டில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் தீப்பிடித்து எரிந்து வருகிறது.

அங்கு தொடர்ச்சியாக பரவிய இந்த காட்டித்தீ அருகில் உள்ள வீடுகளை தீக்கிரையாக்கியது.
உடனே அப்பகுதி வீடுகளில் இருந்த 3000 பேரை மீட்புபடையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். பெரும்பான்மையான மக்கள் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சில உடல்கள் எரிந்த நிலையில் கண்டிபிடிக்கப்பட்டுள்ள போதிலும் அப்பகுதியில் வாழும் 100 பேர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த வாரங்களில் நாடு முழுவதும் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 வருடங்களுக்கு முன் விக்டோரியாவில் எற்பட்ட பெரும் தீ விபத்தில் 173 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment